மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

திட்டக்குடி அருகே ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:13 am IST

திட்டக்குடி அருகே ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூா் ஊராட்சியில் சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுதேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கடந்த வாரம் ஏரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குத்தகைக்கான ஏலத்தில் ஒருவா் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்ததாகவும், மற்றவா்களுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்தும், ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வட்டச் செயலா் பாண்டியன் தலைமையில் நாவலூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸாா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.