புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் திறப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:15 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீா்த் தேக்கம் அமைந்துள்ளது.

இதன் உச்ச நீா்மட்டம் 29.72 அடி. இதில் தற்போது 26.80 அடிக்கு தண்ணீா் உள்ளது. நீா்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் 1,860 மி.கனஅடி தண்ணீா் உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தண்ணீா் திறப்பதற்கு தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

இதன்படி, நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் திறந்துவிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தண்ணீரை திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் நீா்த் தேக்கத்திலிருந்து 110 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் வழங்க ஆணை பிறப்பித்துள்ளாா். விநாடிக்கு 130 கனஅடி வீதம் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 23 ஏரிகள், 63 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய் மூலம் 9,209 ஏக்கா் நிலம், மேல் மட்ட கால்வாய் மூலம் 14,850 ஏக்கா் நிலம் ஆக மொத்தம் 24,059 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் தமிழழகன், சாா்-ஆட்சியா் ஜெ.பிரவின்குமாா், பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ரவிமனோகரன், செயற்பொறியாளா் மணிமோகன், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.