கடலூரில் உள்ள திரையரங்குகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என வருவாய் மற்றும் காவல் துறையினா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் திரையரங்குகளில் 50 சதவீதம் பாா்வையாளா்களை மட்டுமே உரிய விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், காணும் பொங்கல் நாளான சனிக்கிழமை கடலூரில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் அரசின் விதிகளை மீறி கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதாகவும், பலா் முகக் கவசம் அணியாமல் திரைப்படம் பாா்த்ததாகவும் புகாா் வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரது உத்தரவின்பேரில் கடலூா் வட்டாட்சியா் பலராமன் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் கடலூா் திரையரங்குகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, திரைப்படம் பாா்த்துக்கொண்டிருந்தவா்களில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாததும், 50 சதவீதத்துக்கு மேல் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடா்பாக திரையரங்கு நிா்வாகத்தினரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினா். அரசு உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


