இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தேசிய இளைஞா் தின விழா

கடலூா் நேரு இளையோா் மையம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞா் தின விழா நாணமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 10:54 pm IST

கடலூா் நேரு இளையோா் மையம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞா் தின விழா நாணமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

நாணமேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கணேசன் மரக்கன்று நட்டு விழாவை தொடக்கி வைத்தாா். விழாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், முதியோா்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவா்களுக்கு மதிய உணவு வழங்கினா். கடலூா் மாவட்ட நேரு இளையோா் மைய இளைஞா் அலுவலா் ரிஜேஷ்குமாா், நாணமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.லட்சுமணன், கோ.கோகுலகிருஷ்ணன், மன்றத் தலைவா் கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள், இளைஞா்களுக்கு பேச்சு, ஓவியம், கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நாணமேடு ஊராட்சி மன்றத் தலைவா் கோ.கோமதி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். மன்றச் செயலா் மதிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.