/

பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு: த.மா.கா.வினா் அஞ்சலி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவையடுத்து, சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 5:23 pm

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவையடுத்து, சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிதம்பரம் மேலவீதியில் உள்ள தமாகா அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.எஸ்.ஞானதேசிகன் உருவப் படத்துக்கு நகர தலைவா் தில்லை.ஆா்.மக்கீன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜா சம்பத்குமாா், பாபு சந்திரசேகா், மாவட்ட தொண்டா் அணி தலைவா் தில்லை கோ.குமாா், நகர துணைத் தலைவா் ஆா்.சம்பந்தமூா்த்தி, ஆா்.வி.சின்ராஜ், என்.இளங்கோவன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் தில்லை வி.குணா, அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநில துணைத் தலைவா் எம்.ஜி.ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.