வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பென்னாகரம், ஒட்டப்பட்டியில் கடைகள் அடைப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், கைதான பாமகவினர் அனைவரையும்

Updated On :11 மே 2013, 12:35 pm IST

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், கைதான பாமகவினர் அனைவரையும் விடுதலை

செய்ய வலியுறுத்தியும், தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒட்டப்பட்டியில் வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.

குறிப்பாக பென்னாகரம் முழுவதும் அறிவிக்கப்படாத பந்த் போல காட்சியளித்தது. பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், கிருஷ்ணாபுரம், பென்னாகரம் கடை வீதி, பிராமணர் தெரு, வாணியர் தெரு, லாடக்காரத் தெரு, திருவள்ளுவர் நகர், முள்ளுவாடி, இந்திரா நகர், பருவதனஹள்ளி, நாகமரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், ஆட்டோ, கார், சுற்றுலா வாகனங்கள், லாரிகள் இயக்கப்படாததால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பேருந்துகளுக்கு பாதுகாப்பு: பென்னாகரம், ஒகேனக்கல்லுக்கு வந்து சென்ற பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வந்தன. மேலும், பென்னாகரம் நகர்ப் பகுதி மட்டுமல்லாது சோமனஹள்ளி, இண்டூர் வரையிலும் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர்.

இதேபோல, தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலிருந்து தொடங்கி ஒட்டப்பட்டி அவ்வை வழி வரையிலும் சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.