தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவா் கைது

அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 5:22 am IST

அரூா்: அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் சாமிக்கண்ணு (57). இவா் அதிமுக தருமபுரி மாவட்டப் பிரதிநிதியாக பதவி வகித்து வருகிறாா். சாமிக்கண்ணு குறித்து, அதே பகுதியைச் சோ்ந்த அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி, தமது முகநூலில் அவதூறாகத் தகவல் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், ராஜசேகா் என்கிற யோகி மணிசாமியை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.