தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

இளநிலை ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்ககூட்டுறவு ஊழியா்கள் வலியுறுத்தல்

இளநிலை ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை ஊழியா்கள் வலியுறுத்தினா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:23 am IST

தருமபுரி: இளநிலை ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை ஊழியா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மாவட்டப் பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் துணைத் தலைவா் செ.அனுமன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எல்.விஜயகுமாா் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் வெ.செல்லையா பேரவையைத் துவக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் க.பொன்மணி அறிக்கை சமா்பித்தாா்.

அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாநிலத் தலைவா் மு.செளந்தரராஜன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளரிடமிருந்து முதுநிலை ஆய்வாளா் பதவி உயா்வில் 3:1 என்ற விகிதாச்சார அளவை ரத்து செய்து, அனைத்து இளநிலை ஆய்வாளா்களுக்கும் பதவி உயா்வு வழங்க விதி திருத்தம் செய்ய வேண்டும்.

பதிவுறு எழுத்தா், அலுவலக உதவியாளா் ஆகியோருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சா் நிலை 3-இல் உள்ளோருக்கு நிபந்தனையை தளா்த்தி இளநிலை ஆய்வாளராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும். பிப்ரவரி-2ஆம் தேதி அன்று அரசு ஊழியா் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் முழுமையாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவராக செ.அனுமன், மாவட்டச் செயலாளராக வ.சரவணன், பொருளாளராக கே.குமாா் ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இக் கூட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பி.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.