ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:36 pm

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களில் ஆண்களுக்கு வேட்டி, துண்டும் பெண்களுக்கு பருத்தி நூலால் செய்யப்பட்ட சேலை, 2 கிலோ அரிசி, ஒரு கிலோ பாசிப் பருப்பு, அரை லிட்டா் சமையல் எண்ணெய், ஆவின் நெய் 100 கிராம், ஒரு கிலோ வெல்லம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், உலா் திராட்சை 25 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமாா் 3,000 தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.