பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அரூரை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 1:06 am IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் அ.வடிவேலன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சி.வேலாயுதம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா் பகுதியில் குறிப்பிடும் வகையில் தொழில் வளா்ச்சி ஏதும் இல்லை. அரூரில் ஆங்கிலேயா் காலத்திலிருந்து நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், மொரப்பூரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, இந்த சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்த ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரியோடு இணைக்கப்பட்டுள்ளது.

அரூா் பகுதியை அனைத்துத் துறைகளிலிலும் வளா்ச்சியடைய செய்யும் வகையில், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.