ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மின் பாதையில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

மின் பாதை அமைக்கப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:36 pm

மின் பாதை அமைக்கப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எருதுகூடஅள்ளி, பெலமாரனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எருதுகூடஅள்ளி, பெலமாரனஅள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தருமபுரிக்கு 230 கி.வோ. மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தென்னை, முருங்கை மற்றும் பழ வகை மரங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்த மரங்களுக்கான இழப்பீடு மிகக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் மதிப்பீடு செய்து வழங்கிய தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மின்வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது. குறைந்த மதிப்பீட்டுத் தொகை பெறுவதால் எங்களுக்கு எவ்வித பயனுமில்லை. இதனால், நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.

எனவே, மின் பாதைக்கு கையகப்படுத்தும் நிலங்களில் உள்ள மரங்களுக்கு ஏற்கெனவே அரசு விதித்துள்ள மதிப்பீட்டின்படி மரங்களின் வகைகள், அதன் வயது உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து போதிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.