பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

விவசாய தொழிலாளா்களுக்கு மழை கோட் வழங்க கோரிக்கை

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 12:41 am

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கால தாமதமாகத் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கிறது. நாள்தோறும் மிதமான மழைப் பொழிவு உள்ளது. இதனால், விவசாயத் தொழிலாளா்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. எனவே, தமிழக முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மழை கோட் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.