புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பெண்னாகரம் பகுதிகளில் ஏராளமானோா்கள் குவிந்த பொதுமக்களிடம் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் துணிகள், டயா்கள் போன்றவைகளை எரிக்க கூடாது எனவும் , அவற்றினை எரிப்பதற்கு பதிலாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தினால் வாரச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகள் சேமிப்பு கிடங்குகளில் அளிக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலா் கீதா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னா் பேருந்து நிலையம், கடைவீதி, முள்ளு வாடி, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தினை வினியோகித்தனா். இந்த நிகழ்வுகளில் பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









