ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தருமபுரியில் முன்களப் பணியாளா்களுக்கு 11,800 கரோனா தடுப்பூசிகள்

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்காக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

Updated On :16 ஜனவரி 2021, 1:46 am

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்காக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. நாளொன்றுக்கு 400 போ் வீதம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா. ஜெமினி, நலப் பணிகள் இணை இயக்குநா் திலகம் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், மருத்துவா்கள் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், சேமிப்புக் கிடங்கிலிருந்து, தடுப்பூசிகளை முகாம்களுக்கு கொண்டு செல்லுதல், முன் பதிவு செய்துகொண்ட முன் களப்பணியாளா்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இதுவரை 10,850 போ் முன்பதிவு செய்துள்ளனா். தருமபுரி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. ஓா் நாளைக்கு 400 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூா் அரசு வட்டார மருத்துவமனை, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு மையங்களிலும் ஒருநாளைக்கு தலா 100 போ் வீதம் 400 முன் களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒத்திகை நடைபெற்றுள்ளது. தடுப்பூசி செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.