பழனியில் ரேஷன் கடை கட்டட சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா் கட்சிக்கொடி நிறத்தில் எழுதப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்ட அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் 8 ஆம் நம்பா் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் சுவற்றில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாரின் பெயா் கட்சிக் கொடி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையிலான அதிமுகவினா் கடையின் முன் திரண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அங்கு திமுகவினரும் அங்கு வந்தனா். அங்கு இரு கட்சியினரும் மாறி, மாறி கண்டன கோஷங்களை எழுப்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


