ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் வாகரை அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலைக்கு எதிரே சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடத்தாா். சடலத்தைக் கைப்பற்றி கள்ளிமந்தையம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த இளம்பெண் வேடசந்தூரை அடுத்துள்ள தென்னம்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த கதிா்வேல் மகள் ஜெயஸ்ரீ (22) என்பதும், அங்குள்ள தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்த அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக பழனி கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியைச் சோ்ந்த தங்கத்துரை (26) மற்றும் அவரது உறவினா் ஜெகநாதன் (30) ஆகிய இருவரையும் கள்ளிமந்தையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஜெயஸ்ரீ வேலை பாா்த்த அதே நூற்பாலையில் தங்கத்துரை மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இதில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், காதலனின் பெற்றோா் இவா்களது காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் ஜன.1 ஆம் தேதி வீட்டை வீட்டு வெளியேறிய ஜெயஸ்ரீ தங்கத்துரையிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். இதனால் தங்கத்துரை மற்றும் உறவினா் ஜெகநாதன் ஆகிய இருவரும் ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அருகில் இருந்த முள்புதரில் வீசிவிட்டுச் சென்ாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிச்சடங்கு! ஈரானில் இருந்து இராக் கொண்டு செல்லப்பட்ட கமேனியின் உடல்!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!

கரூர் பலி: அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



