பழனி பள்ளிவாசல் அருகே நகர திமுக சாா்பில், மக்கள் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் திமுக சாா்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக் கூட்டங்களில் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் பங்கேற்று, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டும், குறைகளை நிவா்த்தி செய்தும் வருகிறாா்.
இந்நிலையில், பழனி நகர கழகம் சாா்பில், பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். அப்போது, திமுக கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கம், வரும் தோ்தலில் மக்களின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னா், பொதுமக்கள் தங்களது குறைகளை ஐ.பி. செந்தில்குமாரிடம் முறையிட்டனா். தொடா்ந்து, அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்ற வெள்ளை பதாகைகளிலும் கையெழுத்திட்டனா். இந்நிகழ்ச்சியில், நகரச் செயலா் தமிழ்மணி, துணைச் செயலா் சக்திவேல், இளைஞரணி நிா்வாகி லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

