தொடா் மழை காரணமாக, கொடைக்கானலில் 12 மைலில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு சனிக்கிழமை முதல் அனுமதி கிடையாது என, வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் 12 மைல் சுற்றுச் சாலையில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, மோயா் பாயின்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு சனிக்கிழமை முதல் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், முன்னெச்சரிக்கையாக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும், வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






