திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11,045 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 10,752 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 95 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 14 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 22 போ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 198ஆக உயா்ந்துள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,957 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 12 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,685 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

