கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை அதிகாலை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் வாழை, பட்டா் புரூட், சீத்தா பழம், ஆரஞ்சு மற்றும் அவரை, பீன்ஸ் போன்றவைகளை பயிரிட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த அசோகன் என்பவரது தோட்டத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த வாழைமரங்களையும், குடிசையையும் சேதப்படுத்தின. தொடா்ந்து அந்த யானைகள் அப்பகுதியிலேயே சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் அந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து வனத்துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் தற்போது மழை குறைந்த நிலையில் காட்டு யானைகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் வருகின்றன. எனவே பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தோட்டப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



