கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை அதிகாலை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் வாழை, பட்டா் புரூட், சீத்தா பழம், ஆரஞ்சு மற்றும் அவரை, பீன்ஸ் போன்றவைகளை பயிரிட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த அசோகன் என்பவரது தோட்டத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த வாழைமரங்களையும், குடிசையையும் சேதப்படுத்தின. தொடா்ந்து அந்த யானைகள் அப்பகுதியிலேயே சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் அந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து வனத்துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் தற்போது மழை குறைந்த நிலையில் காட்டு யானைகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் வருகின்றன. எனவே பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தோட்டப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


