தமிழக அரசு மதுக் கடைகளை மூடினால் நற்பெயர் கிடைக்கும் என்பது சரிதான். ஆனால் வருவாய் இழப்புக்கு வேறு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமல்லவா? மதுப் பிரியர்கள் தங்கள் பழக்கத்தை எளிதில் விட்டுவிடுவார்களா? மது ஆலை உரிமையாளர்கள், அதனால் பயன்பெறும் அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? கூட்டணிக் கட்சியினர் பேச்சை ஆளும் கட்சியினர் கேட்பார்களா? பேச்சுக்கு சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு செயல்படுவதற்கு திமுக நேற்று வந்த அரசியல் கட்சி அல்ல. விசிக தலைவரின் பேச்சுக்குப் பயனில்லாதது. பாவம், அவர், இருதலைக் கொள்ளி எறும்புதான்.