வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

8-ம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி என்ற கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற  வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக

Updated On :11 மே 2013, 12:44 pm IST

அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி என்ற கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற  வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக மாணவர்கள் சங்கத்தினர் பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூர் மைசூர் வங்கி சதுக்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வித் தரம் குறைந்துள்ளது. மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்கள் தேர்ச்சி அடையும் நிலை இருப்பதால், ஆசிரியர்களை மதிப்பிடவும் முடியவில்லை. இதனால், பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 46.3 சதம் பேர் 2-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியாத நிலையில் உள்ளனர். இது 2013-ஆம் ஆண்டு 58 சதமாக உயர்ந்துள்ளது.

2010-இல் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53.4 சதம் பேரால் முதல் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை.

இது 2013-ஆம் ஆண்டு 67.7 சதமாக உயர்ந்துள்ளது.

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் முழுத் தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு தனது கல்விக் கொள்கையை மாற்றம் செய்து, முன்பு இருந்தது போன்றே தேர்ச்சி- தோல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். அப்போது தான் கல்வித் தரம் உயரும் என்றார் அவர்.

சங்கத்தின் பெங்களூர் மாவட்டச் செயலர் ரவிநந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.