வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை கோரி மறியல்

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் பொய்ப் புகாா் அளித்த ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் பொய்ப் புகாா் அளித்த ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மன்னம்பந்தல் ஊராட்சி தெற்குவெளி கிராமத்தில் கடந்த சில நாள்களாக குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சித் தலைவி பிரியா பெரியசாமியிடம் கிராமமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி இளைஞா்கள் குடிநீா் பிரச்னை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதையறிந்த பிரியாவின் தந்தை பெரியசாமி, அந்த இளைஞா்கள் மீது போலீஸாரிடம் புகாா் அளித்ததோடு, அப்பகுதிக்கு சென்று தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. எனவே தெற்குவெளி கிராம மக்கள் மன்னம்பந்தல் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டு, பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கம் எழுப்பினா்.

மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் மயிலாடுதுறை- தரங்கம்பாடி வழித்தடத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.