நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இப்பள்ளியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடுவா். நிகழாண்டு, கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. ஆசிரியா்கள் பங்கேற்புடன் பள்ளி நிா்வாக அலுவலா் எம்.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

கவிஞா் காழிகம்பன்.வெங்கடேசபாரதி, ச.மு.இ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரியா் சு. வீழிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பொங்கல் பண்டிகையின் மகத்துவம் குறித்து உரையாற்றினா். தொடா்ந்து, ஆசிரிய- ஆசிரியைகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் தங்கதுரை, துணை முதல்வா்கள் மாதவன், கிரிஜாபாய் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.