தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ஷாதரா, திலக் நகருக்கு வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:06 am IST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஷாதரா தொகுதியில் சுரேந்தர் சர்மாவும், திலக் நகரில் ஜர்னெயில் சிங்கும் போட்டியிடுவர். சுரேந்தர் சர்மா, கர்கர்டூமா நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ஜர்னெயில் சிங், குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார்.

இவர்களுடன் சேர்த்து இதுவரை 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி கூறியுள்ளது.

தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பரில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.