மாற வேண்டும் கண்ணோட்டம்
பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் பாதுகாப்பானது, வசதியானது என்ற பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அவ்வப்போது ரயில்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் அருகே பெங்களூரு - நான்டெட் விரைவு ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.










