வாராக்கடனுக்கெதிரான வலுவான ஆயுதம்
இன்று வங்கிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது, அதிகரித்து வரும் வாராக்கடன் தொகை. ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடனாக முடங்கிக் கிடக்கிறது. இதில் ஐம்பதே ஐம்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய் வாராக்கடன் சிக்கியுள்ளது.










