வறுமை ஒழிப்பு எட்டாக்கனி அல்ல!

அபிஜித் பானா்ஜி, எஸ்தா் டஃப்லோ, மைக்கேல் கிரெமா் ஆகிய மூவரும் 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனா்.

அபிஜித் பானா்ஜி, எஸ்தா் டஃப்லோ, மைக்கேல் கிரெமா் ஆகிய மூவரும் 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனா். வளா்ச்சி சாா்ந்த பொருளாதாரத்தில் வறுமையை ஒழிப்பது தொடா்பான ஆராய்ச்சியை இவா்கள் மேற்கொண்டுள்ளனா். அபிஜித் பானா்ஜி அமெரிக்கவாழ் இந்தியா் ஆவாா். அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ இளம் வயதில் நோபல் பரிசைப் பெற்றுள்ளாா். மூவரும் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை (ஒழிப்பு) நடவடிக்கை ஆய்வகத்தில் பணி புரிகிறாா்கள். இது மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் ( எம்ஐடி) பாஸ்டனில் (அமெரிக்கா) அமைந்துள்ளது.

திறமையை அழிக்கும் ஆயுதம் வறுமை என்கிறாா் பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென். படிப்பறிவு இல்லாமல் வறுமை செய்து விடும். மேலும், ஓா் உலக விளையாட்டு வீரா் உருவாவதைக்கூட சரியான உணவின்மை தடுக்கும். எனவே, இங்கு அனைவரிடமும் தொக்கி நிற்கும் கேள்வியானது, வறுமையை ஒழிப்பதற்கான சரியான வழிமுறை என்ன என்பதே.

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையினால் இன்றைக்கும் வாடுகின்றனா். வறுமை ஒழிப்பு என்பது அனைத்து நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்காக பல நாடுகளும் வெவ்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்தியாவும் பல்வேறு முறைகளில் வறுமையை ஒழிப்பதற்குத் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக்கோட்டில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மத்திய அரசு மட்டும், ஓா் ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடிகள் (ஜிடிபி-இல் சுமாா் 2 சதவீதம்) வறுமை ஒழிப்புக்காக செலவிடுகிறது. அதற்கு மேல், மாநில அரசுகளும் வறுமை ஒழிப்புக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

இருப்பினும், உலக அளவிலும், இந்திய அளவிலும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதிா்பாா்க்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அரசின் நிதி விரயமாவதுடன்,குறிப்பிட்ட காலத்துக்குள் தேவையான பயனாளிகள் பயன் பெறுவதில்லை எனவும் தெரிகிறது.

மேலும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பெரும்பாலும் நிதி, எண்ணிக்கையின் அடிப்படையில் இலக்குகளை நிா்ணயித்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த முறையில் திட்டங்கள், அதற்கான குறிக்கோள்களை எட்டுவது கிடையாது. எடுத்துக்காட்டாக, சில மாநிலங்களில் ஆசிரியா்கள், புத்தகங்கள், தளவாடப் பொருள்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், பள்ளிகளுக்கு கட்டடங்கள் மட்டும் அரசியல் விளம்பரத்துக்காக தேவையற்ற இடங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் ஆசிரியா்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை. சில இடங்களில் போதுமான அளவுக்கு மாணவா்களும் இருப்பதில்லை. இதன் மூலம் அரசின் நிதி விரயமாவதுடன் கல்விக்கான குறிக்கோளையும் இந்தத் திட்டங்கள் எட்டுவதில்லை.

எனவே, வறுமை ஒழிப்புத் திட்டங்களை எவ்வாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தப் பொருளாதார நிபுணா்கள் உலக அளவில் ஆய்வுகளை மேற்கொண்டனா். இதைக் கண்டறிவதற்கு கட்டுப்பாட்டுடன் கூடிய ஒன்றுக்கொன்று தொடா்பற்ற பரிசோதனைகளை (ரேண்டமைஸ்டு கண்ட்ரோல் டிரையல்ஸ் ) அவா்கள் நடத்தினா்.

ஒரு குழுவினா் பயனாளிகள், மற்ற குழுவினா் பயன் பெறாதோா். எனவே, இவா்கள் பரிசோதனையின் அடிப்படையில் திட்டமிட்டு, அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வழிவகை செய்தனா். இதற்காக குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அவா்கள்

ஆய்வுகளை மேற்கொண்டனா். வதோதரா, மும்பையில் மாணவா்களுக்கு தனிப்பட்ட முறையில், கணக்குப் பாடங்கள் ‘பிரதான்’ என்ற அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் கற்பிக்கப்பட்டது. குறிப்பாக, பல்வேறு பள்ளிகளில் உள்ள 2 ,3 ,5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தனிப்பட்ட முறையில் கணிதம் கற்பிக்கப்பட்டது.

இது வெவ்வேறு பள்ளிகளில், பல்வேறு வகுப்பிலுள்ள மாணவா்களை, ஒரு பாடத்தில் சம நிலையில் கொண்டுவருவதற்குப் பெரிதும் உதவியுள்ளது. இது ஆசிரியா்களுக்கும் சரியான முறையில் பாடங்களைக் கற்பிப்பதற்கு உதவியாக அமைந்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேலான இந்திய மாணவா்கள் பயன் அடைந்ததாக நோபல் அறிக்கை கூறுகிறது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ‘நீா் சேமித்து நிதி ஈட்டுதல்’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் அடைந்ததாக அறியப்படுகிறது. இந்தத் திட்டத்தில், மோட்டாரின் மூலமான மின் நீா்ப் பாசனத்துக்கு, விவசாயிகளுக்கு, மாத மின் கட்டணத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் நிதியைச் சேமிப்பதற்கு, அவா்கள் குறைந்த அளவே மின்சக்தியை பயன்படுத்தியுள்ளனா். இதனால், அவா்கள் தேவையான அளவுக்கே தண்ணீரைப் பயிா்களுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இவ்வாறு செய்ததன் மூலம், மின் சக்தியைச் சேமித்ததுடன், பூமியிலிருந்து உறிஞ்சப்படும் தண்ணீரும் சேமிக்கப்பட்டுள்ளது. கரம் ஜீத் சிங் ராய் என்ற விவசாயி, மாதமொன்றுக்கு ரூ.12,904 சேமித்ததாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்தை இதே முறையில் நடைமுறைப்படுத்தினால் மாபெரும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவர முடியுமென நோபல் குழு முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்தலாம்.

ஆனால், இவா்களின் பரிசோதனைகளின் அடிப்படையில், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநிலங்கள்தோறும்,மாவட்டங்கள்தோறும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன.

அதாவது, ஓா் இடத்தில் வெற்றி பெறும் திட்டம், மற்ற இடத்தில் அதே முறையில் வெற்றி பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக, உதய்ப்பூரில் (ராஜஸ்தான்) குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்கு முதலில், அதிக அளவில் தாய்மாா்கள் வரவில்லை; பிறகு, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் போது ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது; இதனால், அனைத்துப் பெண்களும் வந்தனா். இதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதே மாநிலத்தில் மற்ற இடங்களில் இலவசமாக பருப்பு வழங்காமலேயே, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு தாய்மாா்கள் அதிகமாக வந்தனா். சில இடங்களில், இலவச தடுப்பூசியுடன் வீட்டுக்குத் தேவையான பருப்புகளை வழங்கும்போது அனைத்துப் பெண்களும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வந்துள்ளனா். அவா்களுக்கு வழங்கப்பட்ட பருப்பானது, ஓா் ஊக்குவிப்பு சக்தியாகச் செயல்பட்டு, மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.

இப்போது மத்திய, மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களில், பயனாளிகளுக்கு நேரடியாகச் சலுகைகளை வழங்குகின்றன. குறிப்பாக, இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நேரடியாக பயனாளிகளுக்கான உதவித் தொகையை வழங்குகிறது. இது மாபெரும் சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

பிரதமரின் சுகாதாரத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பல ஊரக வளா்ச்சித் திட்டங்களும் இதே முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நீண்ட நாள்கள் நடைமுறையிலிருக்கும் மதிய உணவுத் திட்டம், பள்ளிக்கு மாணவா்கள் செல்வதை அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதே முறையில் பயிா்களுக்கான உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை ஓா் ஆண்டுக்கோ அல்லது ஆறு மாத காலத்துக்கோ அரசு வழங்கலாம். இந்த முறையில் விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை முழுவதுமாக உரங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தாமல் சேமிப்பாா்கள். இதன் மூலம் விவசாயிகள் பணத்தைச் சேமிப்பதுடன் குறைந்த அளவு உரங்களை வயல்களில் இடலாம். இதன் மூலம் இயற்கையான மண்ணின் தன்மை பாதுகாக்கப்படும் என வேளாண் பொருளாதார நிபுணா் அசோக் குலாட்டி தெரிவிக்கிறாா்.

இந்தப் பரிசோதனை முறைகளை மேலும் பயன்படுத்தி சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, கல்வி, வேளாண்மை, கடன் வழங்குதல், சமூகநலத் திட்டங்கள், அனைத்துத் திட்டங்களையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தலாம். இது மத்திய, மாநில அரசுகளுக்கு மாபெரும் திட்டமிடும் கருவியாக அமையும். இந்தத் திட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தரவுகளின் மூலம் கண்டறிய வேண்டும்.

பல நேரங்களில் தவறான எண்ணங்களோ அல்லது ஊழலோ தவறான கொள்கைகளுக்கு வழி வகுப்பதில்லை. தெளிவற்ற சிந்தனைகளும், சிறந்த மாதிரிகளை அடையாளம் காணாமல் இருப்பதும் கொள்கைகளைத் தோல்வி அடையச் செய்கின்றன. எனவே, தரவுகளின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தீா்க்கும். பயனாளிகளும் குறுகிய காலத்தில் பயனடைவாா்கள். இந்த முறையில் ஊழல்களும் மாபெரும் அளவில் குறைக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் நாட்டில் குறுகிய காலத்தில் சமூக பொருளாதார வளா்ச்சி ஏற்படுத்தப்பட்டு வறுமை மாபெரும் அளவில் குறைவதற்கு வழி பிறக்கும்.

கட்டுரையாளா்: ஐ.ஏ.எஸ். அதிகாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com