இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காவல் நிலையங்களில் பொதுமக்களை வரவேற்க 2,640 வரவேற்பாளர்கள் நியமனம்!

பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை வரவேற்று, அவர்களது பிரச்னைகளைக் கேட்கும் வகையில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

News image
Updated On :19 டிசம்பர் 2016, 7:04 am

DIN

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதை நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை வரவேற்று, அவர்களது பிரச்னைகளைக் கேட்கும் வகையில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் முதல் நடவடிக்கையாக வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 1,007 பெண் காவலர்கள் உள்பட 2,640 காவலர்களுக்கு சென்னை காவலர் பயிற்சி கல்லூரி மூலம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பேசி பழக வேண்டும் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகள் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், உளவியல் வல்லுநர்கள்,சமூக ஆர்வலர்கள்,வழக்குரைஞர்கள் ஆகியோர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள்,முதியோர்கள் ஆகியோரின் தேவையறிந்து செயல்படுவது குறித்தும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மனுதாரர்களின் குறைகளை கேட்டவுடன், அதை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண்பதற்கும்,மனு தாரர்களுக்கு வழிகாட்டுவதற்கும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள், காவல் நிலையங்களுக்கு சென்றவுடன் அங்கு வரவேற்பாளர்களாக செயல்படும் காவலர்களிடம் தங்களது பிரச்னைகளை தெரிவிப்பதன் மூலம், நேரமும்,அலைச்சலும் குறையும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.