மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குற்றால அருவியில் குளிக்கத் தடையா! இது எப்போ?

குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும் போது எவரும் அப்பகுதியின் பக்கமே செல்லக் கூடாது என்று அதிசயச் சட்டம் நடைமுறையில் இருந்தது. 

News image
kutralam falls
Updated On :18 நவம்பர் 2019, 7:34 am

தினமணி

குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும் போது எவரும் அப்பகுதியின் பக்கமே செல்லக் கூடாது என்று அதிசயச் சட்டம் நடைமுறையில் இருந்தது. 

குற்றால நாதருக்கு ஆலய பூஜைக்காக அருவி நீரை எடுக்கவும், ஆலய பூஜை நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது.

ஆலய நிர்வாகத்தினர் அருவியில் அனைவரும் நீராட உரிமைகோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆலய பூஜையை அருவிக்கருகில் நடத்த அனுமதித்ததுடன், ஆங்கிலேயர்கள் நீராடும்போது அவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தக் கூடாது என்றும் தீர்ப்பளித்தார்.

Story image

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு சர் அர்னால்டு ஒய்ட் தலைமையிலான நீதிபதிகள் குழு, அருவி பொதுவானது - ஆங்கிலேயர்கள் இரண்டு மணி நேரமே குளிக்கலாம். திருவிழாக் காலங்களில் அங்கு ஆங்கிலேயர்கள் நீராடப் போகக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பும் மனநிறைவு அளிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 1915- ஆம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் அங்கு வழக்கு நடந்தது. பின்னர் பிரிவி கவுன்சில் 1917-ஆம் ஆண்டு முதல் யார் வேண்டுமானாலும் நீராடலாம் ஆனால் ஆதி திராவிடர்கள் இதில் நீராடக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.

1938-ஆம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த போது இந்தத் தடையை நீக்கி எல்லோரும் குளிக்கலாம் என்கிற நிலையை ஏற்படுத்தினார்.
 வெ.இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு முதல் பாகத்திலிருந்து... 

- கோ. தமிழரசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.