திருநெல்வேலி 'இருட்டுக்கடை அல்வா'வின் புகழ்

மற்ற கடை அல்வாவை விட இங்கு செய்யப்படும் அல்வா ருசியாக இருக்கக் காரணம், அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும், அதைத் தயார் செய்வதும் கைப்படத்தான்.
'இருட்டுக்கடை அல்வா' கடையில் ஹரிசிங்
'இருட்டுக்கடை அல்வா' கடையில் ஹரிசிங்

திருநெல்வேலி டவுன் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டுவிட்டிருக்கிறார். சந்தித்தால் நன்கு அன்பு காட்டிப் பேசுவார். தனக்கு கரோனா இருப்பது பற்றி தெரிய வந்ததும் தற்கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நல்ல நண்பர்.

1930 - 1940-களில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ண சிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையைச்  சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை. மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

மற்ற கடை அல்வாவை விட இங்கு செய்யப்படும் அல்வா ருசியாக இருக்கக் காரணம், அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும், அதைத் தயார் செய்வதும் கைப்படத்தான். இது தான் அல்வாவிற்கு ஒரு தனிச்சிறப்புள்ள சுவையைத் தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது !

இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் மெஷினைக் கொண்டு இன்னும் 10 மடங்கு கூடுதல் அல்வா தயார் செய்து விற்க முடியும். இருப்பினும் தங்கள் தரம் சிறிதும் குறையக் கூடாது என்பதால் பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.

இருட்டுக்கடை என்று பெயர் வரக் காரணம், 1930 களில் கடை துவங்கப்பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி, 'இருட்டுக்  கடை அல்வா' என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று, ஒரு 200 வாட்ஸ் பல்ப் எரிகிறது, அவ்வளவு தான் வித்தியாசம். கடைக்கு பெயர்ப் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ, புகழோ குறையவே இல்லை. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அதுதான் அடையாளம் !

இருட்டுக் கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறார்கள். 

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுடச்சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறார்கள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டியுள்ள பேப்பரை எடுத்து கையை துடைத்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது 

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி, பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம்! (ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது!)

இருட்டுக்கடை அல்வாவில் வெறும் அல்வா மட்டுமே இருக்கும். முந்திரிப் பருப்பு போன்ற எக்ஸ்ட்ரா அயிட்டங்கள் எதுவும் சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்த்தால் அல்வாவின் ருசியை முழுமையாக உணரமுடியாதாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com