உலகில் பெரிய உயர்நிலை பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பெரிய ஊர்வன விலங்குகளுக்கு கீழ் உள்ள பலவகை உயிரினங்கள், உதாரணமாக வாலுடைய தவளையான சாலமண்டர்கள், நட்சத்திரமீன்கள், நண்டுகள் மற்றும் பல்லிகள் போன்ற விலங்கினங்கள், குறைந்தபட்சம் சில உறுப்புகளை முழுமையாக மீளுருவாக்கம் செய்யும் திறனைக் கொண்டுள்ளன. தட்டைப்புழுக்களை எத்தனை துண்டுகளாகவும் வெட்டலாம்; ஒவ்வொரு துண்டும் ஒரு முழு உயிரினத்தையும் மறுகட்டமைக்கும்/உருவாக்கும். மனிதர்கள் போன்ற பாலூட்டிகளும், பறவைகளும் புதிய திசு வளர்ச்சியுடன் காயங்களை மூடும் திறன் கொண்டவர்கள். மேலும், நமது கல்லீரல்கள் 50% இழப்புக்குப் பிறகும் முழு அளவில் மீளுருவாக்கம் செய்யும் திறன் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, கிட்டத்தட்ட தட்டையான புழு போன்ற திறனையேக் கொண்டுள்ளன.