வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு அபராதம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2013, 6:10 pm IST

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாள்களை தவறாக திருத்தினால் ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு தவறுக்கு ஒவ்வொரு விதமான தண்டனை வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாள் திருத்தியவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும்.

அதற்கு மேல் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம் வழங்கப்படும். மேலும் கவனக்குறைவாக இருந்தால், ஊக்கத்தொகை நிறுத்தப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.