அறிவுதான் தெய்வம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற பாரதியார் விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளைஞர்கள் பாரதியாரின் தேசப்பற்றையும், சமுதாய நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதைத் தெளிவான பாதையில் வழிநடத்த வேண்டும். பொதுவாக, நாம் கடவுளை வழிபடும்போது பொன் வேண்டும், பொருள் வேண்டும் அல்லது ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டுகிறோம். ஆனால் பாரதியார் அறிவில் தெளிவும், நெஞ்சில் துணிவையும், ஐம்புலன்கள் மீது சுயகட்டுப்பாடும் வேண்டுமென்று கடவுளிடம் கேட்டார். இதுதான் சாதாரண மனிதர்களுக்கும் மகாகவிக்கும் உள்ள வித்தியாசம்.
ஆயிரம் தெய்வங்களைத் தேடும் ஆறறிவு பெற்ற மனிதர்கள், அறிவுதான் தெய்வம் என்று உணர வேண்டும். பாரதியார் எழுதிய கவிதைகளில் "தேடிச்சோறு நிதம் தின்று..' என்று தொடங்கும் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் புத்துணர்வு பிறக்கும். "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..' என்று முடியும் அந்த கவிதை நம்மை எழுச்சி பெறச் செய்யும். மகாகவி பாரதியார் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்றார் ராமசுப்பிரமணியன்.
கோவை கங்கா மருத்துவமனையின் நிர்வாகி ஜே.ஜி. சண்முகநாதனுக்கு பாரதியார் விருதும், தியாக துருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழ்ப்பணியாற்றி வரும் சா.சுப்பிரமணியன், பேராசிரியர் அர்த்தநாரீசுவரன் ஆகியோருக்கு "பாரதி புகழ் பரப்புநர்' பட்டயமும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் மகள் டாக்டர் மணிமேகலை கண்ணன், எத்திராஜ் கல்லூரி முதல்வர் ஜோதி குமாரவேல், பரத நாட்டியக் கலைஞர் பார்வதி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு "பாரதி கண்ட புதுமைப்பெண்' விருதும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் உலகநாயகி பழனி எழுதிய, "எட்டையபுரத்து எரிமலை', சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் யு.எம்.கண்ணன் தயாரித்த, "பாரதியின் பாஞ்சாலி சபதம்' சி.டி ஆகியவை வெளியிடப்பட்டன.
பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, துணைத்தலைவர்கள் மேஜர் ராஜா, டி.கே.எஸ்.கலைவாணன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எனக்கும் அவருக்குமான உறவு... பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் பாரதிராஜா! இபிஎஸ் இரங்கல்

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



