கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

'நீட்' தேர்வு மையங்களை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் நீடிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 மார்ச் 2017, 8:42 pm

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மேல்நிலைப் பள்ளித் தேர்வு வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்களது 'நீட்' தேர்வு மையங்களை ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், வரும் மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்தக் காலக்கெடு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், தற்போதைய 'நீட்' தேர்வு மையங்கள் மட்டுமன்றி, மகாராஷ்டிரத்தின் நாந்தேட் நகரிலும் கூடுதலாக ஒரு தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.