ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தாமதமாகும் முதுகலை நீட் கலந்தாய்வு: கடும் பணிச்சுமையில் மருத்துவர்கள்

தாமதமாகும் முதுகலை நீட் கலந்தாய்வால் கடும் பணிச்சுமையில் உறைவிட மருத்துவர்கள் உள்ளனர்.

News image

முதுகலை நீட் கலந்தாய்வு

Updated On :13 மார்ச் 2025, 3:38 pm IST

முதுகலை நீட் கலந்தாய்வு தொடங்காததால், மருத்துவமனைகளில், புதிய முதுகலை பயிலும் மருத்துவர்கள் பணியில் இணையாமல், ஏற்கனவே பணியில் இருக்கும் உறைவிட மருத்துவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

நீட் முதுகலைப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளியான நிலையில், இன்னமும் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.

இதனால், மருத்துவமனையில் புதிய முதுகலை மாணவர்கள் இணையாததால், ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர்கள் வழக்கமான பணி நேரத்தை விடவும் கூடுதலாக பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தாமதத்தால், ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் வேகமாக நடந்து வருகிறது. தேர்வெழுதிய மருத்துவர்கள் பலரும் கால விரையத்தைத் தவிர்க்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், அரசு மருத்துவமனைகளில், இளநிலை மருத்துவர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்படும்.

ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு பணிச்சமை ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

இதில்லாமல், 2025ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024ல் நடந்த தேர்வுக்கான கலந்தாய்வு தொடங்காததால், ஏற்கனவே தேர்வெழுதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது.

வழக்கமாக, உறைவிட மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவுதான். இதில், புதிதாக இளநிலை மருத்துவர்கள் பணியில் சேராததால், எங்களது பணிச்சுமை அதிகரிப்பதோடு, 24 முதல் 30 மணி நேரம் வரை தொடர்ந்து பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.