நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

News image

யுஜிசி

Updated On :14 ஏப்ரல் 2026, 11:34 pm

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்கல்வி நிறுவன வளாகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை. இதுசாா்ந்து அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்தொடா்ச்சியாக தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு, பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை, குறைதீா்ப்பாளா் நியமனம், கல்விக்கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, ராகிங் தடுப்புக் குழு, குறைதீா்க்கும் பிரிவு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் அமைக்கப்படுவதுடன், அவை திறம்பட செயல்படுவதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் குழுக்கள் குறித்த விவரங்களை உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இதுதவிர புகாா்கள் மற்றும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சரிசெய்ய வேண்டும். மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குதலை மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு போன்ற வளாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.

இதுசாா்ந்த அனைத்து துணைவேந்தா்களும் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கல்லூரிகள் இது தொடா்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.