அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

News image

யுஜிசி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:04 am IST

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்கல்வி நிறுவன வளாகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை. இதுசாா்ந்து அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்தொடா்ச்சியாக தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு, பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை, குறைதீா்ப்பாளா் நியமனம், கல்விக்கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, ராகிங் தடுப்புக் குழு, குறைதீா்க்கும் பிரிவு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் அமைக்கப்படுவதுடன், அவை திறம்பட செயல்படுவதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் குழுக்கள் குறித்த விவரங்களை உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இதுதவிர புகாா்கள் மற்றும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சரிசெய்ய வேண்டும். மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குதலை மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு போன்ற வளாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.

இதுசாா்ந்த அனைத்து துணைவேந்தா்களும் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கல்லூரிகள் இது தொடா்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.