பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

News image

யுஜிசி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:04 am IST

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்கல்வி நிறுவன வளாகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை. இதுசாா்ந்து அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்தொடா்ச்சியாக தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு, பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை, குறைதீா்ப்பாளா் நியமனம், கல்விக்கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, ராகிங் தடுப்புக் குழு, குறைதீா்க்கும் பிரிவு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் அமைக்கப்படுவதுடன், அவை திறம்பட செயல்படுவதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் குழுக்கள் குறித்த விவரங்களை உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இதுதவிர புகாா்கள் மற்றும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சரிசெய்ய வேண்டும். மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குதலை மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு போன்ற வளாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.

இதுசாா்ந்த அனைத்து துணைவேந்தா்களும் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கல்லூரிகள் இது தொடா்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.