நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம்; ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல: ஆ. இராசா புதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டுதுரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமிவிஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்
/

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்கு 16,000 மாணவர்கள் விண்ணப்பம்...

News image

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம்

Updated On :2 ஜூன் 2026, 6:13 pm IST

புது தில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம் சைபர் தாக்குதல்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) சீரானது.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையில் பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நிகழாண்டில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அத்தளம் https://www.cbse.gov.in/newsite_old/rchk.html செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) சீரானது. அதன் வழியே மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏற்கெனவே தங்கள் திருத்தப்பட்ட விடைத் தாள்களை விண்ணப்பித்து அதன் ஸ்கேன் செய்டயப்பட்ட நகலைப் பெற்றிருத்தல் அவசியம்.

இத்தளத்தில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 6 நள்ளிரவு வரை https://postresult.cbseit.in/pvr/ தளம் வழியே விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தளம் சீரான பின், முதல் 9 - 10 மணிநேரத்தில் 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இன்னும் 3 நாள்கள் கால அவகாசம் இருப்பதால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PDF
CBSE Press_Release_Verification_02062026
பார்க்க

Summary

CBSE portal withstands cyberattack - 16,000 students had submitted applications through the CBSE re-evaluation portal by 3 pm on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.