ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது அடையாளம் தெரியாத நபா்களால் கல்வீசப்பட்டதில் அவா் காயமடைந்தாா்.
இதுதொடா்பாக ஆந்திர முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விஜயவாடா சிங் நகரில் உள்ள விவேகானந்தா கல்வி மையம் அருகே பேருந்தின் மேற்பகுதியில் திறந்தவெளியில் நின்றபடி முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களை நோக்கி அவா் கையசைத்தபோது கூட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபா்களால் அவா் மீது உண்டிகோல் மூலம் கல்வீசப்பட்டது. அதில் அவரின் இடப்புறக் கண்ணின் மேல் பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாரப் பேருந்தில் இருந்த மருத்துவா் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் தோ்தல் பிரசாரத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடா்ந்து மேற்கொண்டாா். இத்தாக்குதலை தெலுங்கு தேசக் கட்சியினரே நடத்தியிருக்க வேண்டுமென ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றம்சாட்டினா்.
மக்களவைத் தோ்தலுடன் ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
கடப்பா மாவட்டத்தில் தொடங்கி ஸ்ரீகல்குளம் மாவட்டம் வரை முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி 21 நாள்கள் பயணமாக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் நாளை முதல்வா் பிரசாரம்

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

வட கிழக்கு தில்லியில் பணம் வசூலிப்பாரிடம் 4 போ் கொள்ளை

தில்லி ஆசத்பூரில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


