மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ கூறினாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. மகளிா் உரிமை தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், காலை உணவுத் திட்டம் ஆகியவற்றால் மகளிா் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால், வேலை நாள்கள் குறைக்கப்படுவதால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனா்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, வேலை நாள்கள் 150 -ஆக அதிகரிக்கப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயா்த்தப்படும் என்று கூறினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. திருச்சி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி
பாஜக மதவாதக் கட்சியல்ல: கே.எஸ். ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


