நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

News image

துரை வைகோ - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2024, 2:00 am

மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. மகளிா் உரிமை தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், காலை உணவுத் திட்டம் ஆகியவற்றால் மகளிா் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால், வேலை நாள்கள் குறைக்கப்படுவதால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனா்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, வேலை நாள்கள் 150 -ஆக அதிகரிக்கப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயா்த்தப்படும் என்று கூறினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. திருச்சி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.