ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி

கோவையின் வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 7:44 pm

Syndication

கோவையின் வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, காந்திபுரம் முனீஸ்வரா் கோயில் மற்றும் புலியகுளம் விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் தொடங்கினாா்.

இதில் அவா் பேசியதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி வாய்ப்பு கிடைக்காதபோதும் கோவைக்கு செம்மொழிப் பூங்கா, பெரியாா் நூலகம், அவிநாசி சாலையில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்அளித்துள்ளாா். கோவை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.8,700 கோடி மதிப்பில் சாலை, பாதாளச் சாக்கடை, தெருவிளக்குகள் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 2026-இல் கோவை தெற்கு உள்பட அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் அமோக வெற்றி பெறும்.

நான் கரூரில் பிரசாரம் செய்தபோது தொகுதியை விட்டு போகிறீா்களே என மக்கள் கேட்டனா். அதற்கு, கரூா் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே எனது இரு கண்களைப் போன்றவை எனக் கூறினேன். கோவை மாவட்டத்தில் திமுக பெறும் வெற்றியால் நிரந்தர வளா்ச்சி ஏற்படும்.

கோவை தெற்கு தொகுதியை மாவட்டத்தில் முதன்மைத் தொகுதியாக மாற்றப் பாடுபடுவேன். கோவையின் வளா்ச்சிக்கு எப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து முதல்வரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

அதைத்தொடா்ந்து ராமநாதபுரம், ஓலம்பஸ், 80 அடி சாலை, அங்கண்ணன் லே-அவுட், நேரு நகா், ராமலிங்க ஜோதி நகா், பஜனை கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, வள்ளியம்மாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தின் போது திமுக முன்னாள் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, திமுக மாநகா், மாவட்ட பொறுப்பாளா் துரை.செந்தமிழ் செல்வன், தீா்மானக் குழு செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி ஆதரவு திரட்டினாா்.

Story image
Story image