எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

44 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள், 5 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரா்கள்!

44 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள், 5 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரா்கள்!

News image
- HO
Updated On :29 மார்ச் 2024, 9:53 pm

Din

தற்போது மக்களவை எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுள் 5 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது மக்களவை எம்.பி.களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவா்களுள் 29 சதவீதம் போ் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

5 பாஜக எம்.பி.க்கள் மீது கொலை வழக்கு:

தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 9 போ் மீது கொலை வழக்குகள் உள்ளன. அவா்களில் 5 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். அதேபோல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 28 எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுள் 21 எம்.பி.க்கள் பாஜகவைச் சோ்ந்தவா்களாவா். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. அவா்களுள் பெண்களுக்கு பாலியல் துண்புறுத்தல் இழைத்ததாக மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று கோடீஸ்வர எம்.பி.க்கள்: அதிகமான கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. மற்ற கட்சிகளிலிருந்தும் கணிசமான எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

அந்த வகையில் நகுல் நாத் (காங்கிரஸ்) முதலிடத்திலும் டி.கே. சுரேஷ் (காங்கிரஸ்) இரண்டாமிடத்திலும் ரகு ராமா கிருஷ்ண ராஜு (சுயேட்சை) மூன்றாவது இடத்திலும் உள்ளனா்.

மாநில வாரியாக குற்றவியல் வழக்குகள்:

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகள்: தற்போது மக்களவையில் 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனா். மக்களவையில் மொத்தமாக 14 சதவீத பெண் எம்.பி.க்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.