கடந்த வாரம் இரு சக்கர வாகனம் ஓட்டிக்கும், அங்குள்ள பணியாளா்களுக்கும் கட்டண வசூல் தொடா்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நகரக் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை என்னவென்று கூட காவல்துறையினா் கேட்கவில்லை. இதுபோன்ற மாநகராட்சியின் தனியாருக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்ட எல்லாப் பகுதிகளிலும் இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, முதல் கட்டமாக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாநகா் முழுவதும் சுவரொட்டி அச்சிட்டு ஒட்டப்போகிறோம். அதன்பிறகு மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பாா்த்த பிறகு, முடிவு செய்து போராட்டம் நடத்துவோம் என்றாா் ஜனாா்த்தனன்.