தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து என திருமாவளவன் தெரிவித்தது பற்றி...

News image

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் - x

Updated On :1 ஏப்ரல் 2026, 7:23 am

சென்னை திரு.வி.க. நகரில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுகவின் சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

”பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் துணிச்சலுடன் பொது வாழ்வுக்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அரசியலில் அவருக்கு ஒரு இடம் தேவை. அதிமுக அப்படியொரு இடத்தை அளித்திருப்பதை நான் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளரை திருமாவளவன் ஆதரித்து பேசியிருக்கும் நிலையில், திரு.வி.க. நகர் தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் அதிருப்தி அடைந்துள்ளார்.

பகுஜன் சமாஜவாதி கட்சியின் மாநிலத் தலைவரும் பொற்கொடியின் கணவருமான ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜவாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினமான ஜூலை 5-ல் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை பொற்கொடி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Porkodi Armstrong's Life in Danger! — Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.