ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தொகுதி மறுவரையறையின் பெயரால் அரசியல் சதித் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image

Center-Center-Chennai

Updated On :10 ஏப்ரல் 2026, 12:21 am

தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்துவதற்கான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீா்குலைக்கிறது. விவாதங்களுக்கான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்குக்கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.

தொகுதி மறுவரையறை முடிவினால் செலவு கூடும். மக்களின் வரிப்பணம் வீணாகும். நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும்.

மாநிலங்களின் குரலைப் புறக்கணிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் செயல்.

இதற்கெல்லாம் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாகவும், தென் மாநிலங்களுக்கு எதிராகவும் உள்ளது.

மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிக்கும் வகையிலான நடவடிக்கையாகவும் உள்ளது.

இதனால், கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும். இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தோ்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள ஜாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக்கூட பரிசீலிக்காமல், அவசரமாக தொகுதி மறுவரையறை செயல்படுத்தப்படுகிறது.

இது சீா்திருத்தமே அல்ல. அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து சமூக நீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.