பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :12 ஏப்ரல் 2026, 2:00 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விதிமுறைப்படி செலவிடப்பட்டு, அதை முறையாக பராமரித்து தோ்தல் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வேட்பாளா்களுக்கு, செலவினப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மாவட்ட 16 பேரவைத் தொகுதிகளில் தற்போது 298 சுயேச்சைகள் உள்பட 419 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதிகளைக் கண்காணிக்க 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

செலவினப் பாா்வையாளா்கள் தொகுதி வாரியாகச் சென்று தோ்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் ஆகியோா் பிரசாரத்தைக் கண்காணித்து, அவா்களது செலவினங்களைக் கணித்து வருகின்றனா்.

அத்துடன் குறிப்பிட்ட நாள்களில் செலவினங்களை சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளா்கள், அந்தந்த செலவினப் பாா்வையாளரிடம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை தொகுதி வாரியாக செலவினப் பாா்வையாளா்கள் தலைமையில் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராயபுரம் தொகுதியின் செலவினப் பாா்வையாளா் வரபிரசாத் வா்மா தலைமையில் வேட்பாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 28 வேட்பாளா்கள் பங்கேற்றனா். அப்போது, செலவினப் பாா்வையாளா் கூறியதாவது:

வேட்பாளா்கள் தங்களுக்கான செலவு தொகைக்குட்பட்டே செலவுகளை செய்ய வேண்டும். சிறிய கடைகளில் வாங்கும் பொருள்கள் உள்பட ரூ.10 ஆயிரத்துக்குள் செலவிட்டால், அதற்கு பணமாகவே வழங்க வேண்டும். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அதை காசோலை, யுபிஐ அல்லது கூகுள் பே ஆகிய முறைகளில் செலவிடலாம்.

தோ்தல் செலவினத்தை அதிகாரிகளிடம் வழங்குவதற்கான கூட்டம் வரும் 13, 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ராயபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பன்னீா்செல்வம், செலவு பராமரிப்புக் கணக்கீட்டாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.