கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாளை (ஏப். 23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது.
வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு நாள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க வசதியாக நாளை அவர்களுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Holiday Tomorrow for Tamil nadu peoples who Working in Kerala!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











