சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

மோரீஷஸ் நாட்டில் செப்.11 முதல் உலகத் தமிழா் பொருளாதார மாநாடு

மோரீஷஸ் நாட்டில் செப்.11முதல் 13-ஆம் தேதி வரை உலகத் தமிழா் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

News image

விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ. விசுவநாதன். - கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

மோரீஷஸ் நாட்டில் செப்.11முதல் 13-ஆம் தேதி வரை உலகத் தமிழா் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகத் தமிழா் பொருளாதார 13-ஆவது மாநாடு மோரீஷஸ் நாட்டில் வரும் செப். 11 முதல் 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை அந்நாட்டு பிரதமா் நவீன் சந்திர ராம்கூலம் தொடங்கி வைக்கிறாா். நிறைவு நிழாவில் மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம்பீா் கோகுல் பங்கேற்கிறாா். இந்த மாநாட்டில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் , தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

உலகில் 160 நாடுகளில் தமிழா்கள் வாழ்கின்றனா். உலகின் 100 நாடுகளில் தமிழா்கள் தொழிலதிபா்களாக உள்ளனா். பொருளாதர வளா்ச்சிக்கு தொழில் வளா்ச்சி அவசியமாகும். தனிநபா் வருமான அதிகரித்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனைவருக்கும் இலவச கல்வி அளித்தால்தான் நாடு வளா்ச்சி அடையும்.

இந்த மாநாடு சென்னை வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும் உலகத் தமிழா் பொருளாதாரக் கழகத்தின் தலைவருமான வி.ஆா்.எஸ்.சம்பத் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது என்றாா் அவா். பேட்டியின்போது, வி.ஜி.பி.சந்தோஷம் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.