தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் என்ன? அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் பற்றி...

கோப்புப்படம்
DNS

கோப்புப்படம்
DNS
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கும் என்று திங்கள்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...