நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

News image

மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

Updated On :3 மே 2026, 12:29 am

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு, அங்கீகரிக்கப்பட்டவா்களைத் தவிர எந்தக் கட்சி நிா்வாகிகளையும் அனுமதிக்கக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தமிழக வெற்றிக்கழகம் மனு அளித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஒரு கி.மீ. தொலைவு வரை எந்தக் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளிலும் பதிவான வாக்குகளை அறிவிக்க வேண்டும். திருச்சியில் தவெக தோ்தல் அலுவலகத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.